Latest Posts

21 May 2012

லால்பேட்டை யில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மே29 2012


மேலும் படிக்க...

16 May 2012

இவ்வுலகமும் மறுஉலகமும்

அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலை கட­ல் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் அதில் எவை திரும்புகிறது என்பதை கவனிக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: முஸ்தவரித் (ர­), நூல்கள்: முஸ்­ம் (5101), திர்மிதீ (2245), இப்னுமாஜா (4098),


மறுமை வாழ்க்கையின் அளவில்லா சிறப்பை விளங்குவதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். இவ்வுலக வாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களும் மறு உலகவாழ்க்கையில் கிடைக்கும் இன்பங்களைப் பற்றி இந்த உதாரணம் மூலம் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


மறுஉலகத்தில் கிடைக்கும் இன்பங்கள் கடலளவு நிறைந்தவை. இவ்வுலக இன்பங்கள் ஒருவர் கட­ல் தனது ஆட்காட்டி விரலை நுழைத்து வெளியே எடுக்கும் போது அந்த விர­ல் கடல் நீர் எவ்வளவு திரும்பவும் வந்து சேரும்? இந்த விர­ல் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இவ்வுல இன்பம். இதுதான் இவ்வுலக மறுஉலக இன்பங்களுக்கு உதாரணம்.


கடலுடன் ஒப்பிடும் போது விர­ல் ஒட்டிக்கொண்டிருக்கும் அளவுதான் இவ்வுலக இன்பங்கள். கடல் என்பது மறுஉலக இன்பங்கள். இதில் முஃமின்கள் எந்த இன்பத்தை தேர்வு செய்ய போகிறார்கள்?


இதைப்போன்று நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.


சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது இவ்வுலகம் இவ்வுலுகத்தில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ர­), நூல்கள் : புகாரீ (2892),திர்மிதீ (1572),இப்னுமாஜா (4321), அஹ்மத் (15012), தாரமீ (2699)


விரல் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இன்பத்திற்காக கடல் அளவு இன்பத்தை இழக்கும் மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் இவ்வாறு கேட்கிறான்.


நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ''அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. (அல்குர்ஆன் 9:38)


இவ்வுலக இன்பத்தை விரும்பிய ஒருவர் நடந்தாலும் அதை தருபவனும் அல்லாஹ்தான், அவன் நாடாமல் ஒருபோதும் இவ்வுலக இன்பத்தை நீங்கள் அடையமுடியாது.


யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:134)


அல்லாஹ்வை நம்பாதவர்கள், நம்பியும் அவன் கட்டளைபடி நடக்காமல் பொருட் செல்வங்கள் அதிகம் பெற்றவர்களைப் பார்த்து நீங்களும், அவர்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டும் என்று ஏமாந்து விடவேண்டும். இவ்வாறு அவர்களுக்கு பொருட் செல்வம் வழங்கப்பட்டிருப்பது அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்குதான் என்பதை மறந்துவிட வேண்டாம்!


அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கை யில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 9:55)


''விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட்செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 57:20)


இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.


இவ்வுலகத்தை பயந்து கொள்ளுங்கள்!, பெண்களையும் பயந்து கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி­), நூல்: முஸ்­லிம் (4925)


இவ்வுலக வாழ்க்கை மனிதனை மயக்கத்தில் ஆழ்த்தும் அதன் மீது ஆசையைத் துண்டும், மனிதன் வளரும் போதே இந்த ஆசைûயும் சேர்ந்தே வளர ஆரம்பிக்கும் அதற்காக மார்க்க சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு விட்டு உலக இன்பங்களுக்கு முத­டம் கொடுத்துவிடக் கூடாது.


மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன. 1. பொருளாசை 2. நீண்டநாள் வாழ வேண்டும் என்ற ஆசை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : அனஸ் (ரலி­), நூல் : புகாரீ (6421)


நபித்தோழர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இந்த உலக இன்பங்களைத்தான் மிக அதிகமாக எச்சரித்துச் சென்றுள்ளார்கள்.


6425 .... فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ رواه البخاري


இறுதியாக இவ்வுலக வாழ்க்கையில் இறைக்கட்டளைபடியும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியின்படியும் நடப்பவர்களுக்கு இந்த உலகம் ஒரு சிறைச்சாலைப் போன்றே தோற்றமளிக்கும். இறைக்கட்டளை மதிக்காதவர்களுக்கு இந்த உலகம் சொர்க்கப்பூஞ்சோலையாக காட்சியளிக்கும்.


நபி (ஸல்) அவர்களிடம் இந்த உலக இன்பத்தைப்பற்றி எடுத்துரைத்போதுகூட அவர்கள் மறுஉலகத்தில் இதைவிட சிறந்த இன்பத்திற்கு காத்திருப்பதாக கூறியுள்ளார்கள்.


படைத்தவனை நம்பியவர்கள் மறு உலக வாழ்க்கை நம்பியவர்கள் கடல் அளவு இன்பத்தை பெற முற்சிக்க வேண்டும்.


இவ்வுலகம் முஃமீன்களுக்கு சிறைச்சாலையாகவும் இறைநிராகரிப்பாளர்களுக்கு சொர்க்கமாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நபி (ஸல்) அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்த பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்சம் நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே (பைளாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள். (புகாரீ 4913)


பிர்அவ்ன் என்ற கொடுமைக்காரன் ஆட்சியில் வாழ்ந்த சூனியக்காரர்கள் மூஸா (அலை) அவர்கள் செய்தது உண்மையான அற்புதம் என்பதை தெளிவாக விளங்கியவர்கள் பிர்அவ்னின் கொடுமைகளுக்கு பயப்படாமல் ஓரிறைக் கொள்கை ஏற்று இவ்வாறு கூறினார்கள்.


''எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்றனர். ''எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20;72,73)


நபி (ஸல்) அவர்களைப் போன்று மறுமை வாழ்க்கைக்கு முதலிடம் கொடுத்து இவ்வுலக வாழ்க்கையில் இஸ்லாம் கூறிய அறிவுரைகளை பேணி நடந்து கொள்வோம்.


-சகோதரர் M I சுலைமான்
மேலும் படிக்க...

03 May 2012

குர்ஆன் இறைவேதமா விவாதம்: SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!

குர்ஆன் இறைவேதமா?

SAN இன் சத்தில்லாத வாதமும் TNTJவின் திணறச்செய்த பதில்களும்.

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28,29.04.12 ஆகிய தினங்களில் குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் SAN என்ற கிருஸ்துவ அமைப்பிற்கும் TNTJ க்கும் சென்னை தலைமை அலுவலகத்தில் விவாதம் நடைபெற்றது.

ஏற்கனேவே நடந்த பைபிள் இறைவேதாமா? என்ற தலைப்பில் பைபிளில் உள்ள ஆபாசங்களையும், முரண்பாட்டையும் அடுக்கடுக்காக வீசியதால் திணரிப்போன SAN ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட அடுத்த விவாதத்திற்காக ஓடி ஒழிந்ததை அறிவோம்.

ஒருவழியாக பல நிபந்தனைகளை சொல்லி ஒப்புக்கொண்டது. இரண்டு மாதம் இடைவெளியில் குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பிற்கு அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்து வைப்பார்கள் என்று பார்த்தால் சில கிருக்கர்களின் வாதங்களை படித்துவிட்டு வந்து வாந்திஎடுத்தார்கள்.

குர்ஆனில் ஆபாசம் என்று சித்தரிப்பை ஏற்படுத்த பல முயற்சிகள் செய்து மண்ணைக்கவ்வினார்கள். கடந்த விவாதத்தின் கேசட்டை கூட வெளியிடாமல் அவர்களின் தரப்பில் பார்வையாளராக வந்தவர்கள் நம்மிடம் கேட்டு பெற்றுக்கொண்டார்கள் என்பதை தலைமை தெரிவித்தது.

அப்படிப்பட்ட SAN குர்ஆனை மறுக்க என்ன வாதங்களை வைத்தது அதற்க்கு நம் அமைப்பு என்ன பதில் தந்தது என்பதை அனைவருக்கும் எழுத்து வடிவில் கொடுக்க முற்பட்டுள்ளேன்.

இதே அவர்களின் வாதமும் நம் TNTJ அமைப்பு கொடுத்த பதிலும்.

வாதம்:1

குர்ஆன் அனைத்தையும் சுருக்கமான வார்த்தை கொண்டு விளக்கும் என்கிறீர்கள் தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ் பற்றி குரானில் இருந்து காட்டுங்கள்? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.
(எவ்வளவு அற்புதமான வாதம்யா?)

மறுப்பு:

இதற்கு குர்ஆனிலேயே விளக்கம் இருக்கிறது.முஹம்மது நபி அவர்கள் குரானில் கூறப்பட்ட விஷயங்களுக்கு விளக்கக்கூடியவராகவும் இருக்கிறார் என்று குர்ஆனே சொல்கிறது?
43, 44. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். குர்ஆன் 16:44.

வாதம்: 2

பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே அல்லது இரவாகவே இருக்கிறது. இவர்கள் எப்படி தொழுவார்கள் இதை குர்ஆன் விளக்கவில்லை? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.
(3 மாதம் ஓடனது வேலை செய்து)

மறுப்பு:

குர்ஆனை பற்றி விளக்குவதற்காக வந்த நபி(ஸல்) அவர்கள் இதற்கு தீர்வளிக்கிறார்கள். தஜ்ஜால் என்பவன் வரும்போது ஒரு நாள் என்பது வருடத்தைப்போல் இருக்கும் அப்போது எப்படி தொழ வேண்டும் என்று சஹாபாக்கள் கேட்கும்போது நேரத்தை கணித்து தொழுதுகொள்ளுங்கள் என்றார்கள் அதே போலத்தான் பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே அல்லது இரவாகவே இருப்பவர்கள் தொழவேண்டும்.

....அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும்,ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்

வாதம்: 3

கடல் வாழ் உயிரினம் ஹலால் என்று குர்ஆன் ஒரு வசனத்தில் சொல்கிறது. செத்தவை ஹராம்,என்று சொல்கிறது செத்த மீனை சாப்பிடுகிறீர்கள்? இதில் குர்ஆன் முரண்படுகிறது?
(நல்ல கேள்வி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பார்க்கலையா?)

மறுப்பு:

இதையும் குர்ஆனுக்கு விளக்கம் தர வந்துள்ள நபி ஸல் அவர்கள் விளக்குகிறார்கள் கடலில் செத்தவை ஹலால் என்று இதில் எந்த முரண்பாடும் இல்லை?
நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 382

வாதம்: 4

இறைவனின் படைப்பை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று குர்ஆன் சொல்கிறது? நீங்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்கிறீர்கள் ஏன் ஷைத்தானின் செயலை செய்கிறீர்கள்?

118, 119 அல்லாஹ் அவனை (ஷைத் தானை) சபித்து விட்டான். "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென் றெடுப்பேன்; அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடி வமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்ப டையான இழப்பை அடைந்து விட்டான். 4:119

(பைபிலயாவது உருப்பிடியா படிங்கய்யா? விருத்த சேதனம் பண்ணனும்னு பைபிளே சொல்கிறது ஆதியாகமம் 17:10,11,12,13)

மறுப்பு:

இதில் எந்த முரண்பாடும் இல்லை. இதை குர்ஆனே விளக்குகிறது இப்ராஹீம் நபியின் வழியை பின்பற்றுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது.
95. "அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக! 3-95

இந்த இப்ராஹீம் நபிக்கு இறைவன் விருத்த சேதனம் செய்வதை கட்டளையிட்டுள்ளான் அந்த அடிப்படையில் விருத்த செய்வது குர்ஆனுக்கு முரணில்லை.

வாதம்: 5

குர்ஆனின் 45:6 வசனத்தில்

6.(முஹம்மதே!) இவை அல்லாஹ்வின் வசனங்கள். இதை உண்மையுடன் உமக்குக் கூறுகிறோம். அல்லாஹ்வுக்கும், அவனது வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்?

تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيث بَعْدَ اللَّهِ وَآيَاتِهِ يُؤْمِنُونَ (6)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பிறகு அவர்கள் எந்த செய்தியை (ஹதீஸை) நம்புவார்கள் என்று இருக்கிறது.ஏன் குர்ஆனை விட்டுவிட்டு ஹதீஸ் ஆதாரத்தை சொல்கிறீர்கள்?

(3 மாத கேப்ல ஜமாலிகிட்ட ட்ரைனிங் எடுத்தீங்களா? வார்த்தையை பிடித்து பேசராங்களாம்)

மறுப்பு:

இங்கு வந்துள்ள ஹதீஸ் என்ற வார்த்தை செய்தி என்று அர்த்தம் அதற்கு ஆதாரமாக 68:47,57:34 வசனம் சொல்கிறது.
அதே போல் ஹதீஸ் என்பது வரலாறு என்ற பொருளும் உள்ளது. 79:15
இந்த வசனங்களின் அடிப்படையில் ஹதீஸ் என்ற வார்த்தைக்கு செய்தி என்று பொருள். நபி (ஸல்) அவர்களின் விளக்கத்தை ஏற்கக்கூடாது என்பதல்ல.
இந்த வாதம் குர்ஆனை மறுக்கும் சில அறிவு கெட்டவர்களின் வாதம் ஆகும்.

வாதம்: 6

கணவன்,மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்படும் போது கணவன் மனைவியை அடிக்கச் சொல்கிறது குர்ஆன் (4:34) அதற்கு வரம்பு என்ன? 1தடவையா?,2,தடவையா?10தடவையா?,100தடவையா எத்தனை தடவை என்று குர்ஆன் விளக்க வில்லை இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை?
(ரூம் போட்டு யோசித்தீர்களோ)

மறுப்பு:

இந்த வாதம் கிறுக்குத்தனமானது. கணவன், மனைவிக்கு இடையில் பிணக்கு ஏற்படும் போது, பெண்களுக்கு முதலில் அறிவுரை கூறவேண்டும், பிறகு படுக்கையில் இருந்து விலக்கவேண்டும், அப்படியும் பெண் புரிந்து கொள்ளாத போது பெண்களை திருத்தி அறிவுரை கூற லேசாக அடிக்க அனுமதி உள்ளது.
(குறிப்பு: முகத்தில் அடிக்கக்கூடாது.காயம் ஏற்படும் படி அடிக்கக்கூடாது புகாரி:1294)
இதை புரிந்து கொள்வது எளிதானது. ஒருவனுக்கு பசி என்றால் எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் சாப்பிட முடியும். அதே போல்தான் இதுவும்.
ஒரு மாணவன் தவறு செய்கிறான் என்றால் ஆசிரியர் அறிவுரை கூற எவ்வளவு அடிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பார் அதே போல்தான்.

வாதம்: 7

2:223 வசனத்தில் பெண்கள் விளைநிலங்கள்: அதில் விரும்பியவாறு செல்லுங்கள் என்றால் வரம்பு மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? மனைவியிடத்தில் தவறான முறைகளிலும், உணர்ச்சி வசப்பட்டும் உறவு கொள்ளலாமா?
(குர்ஆன என்ன பைபிள்னு நினைத்தீங்களோ?)

மறுப்பு:

இந்த வசனமே இதை அழகாக கூறுகிறது. பைபிளை போல் ஆபாசமாக பேசவில்லை. விளை நிலம் என்று சொன்னால் விளையக்கூடிய இடத்தில் விதை இடவேண்டும் என்று ரத்தின சுருக்கமாக சொல்கிறது. விதை நிலம் என்றால் வானத்தில் விதை இடமுடியாது.
(பைபிளை போல் ஆபாசமாக பேசாமல் கடவுள் வார்த்தை என்று நிரூபிக்கும் வண்ணம் அழகாக பேசுகிறது.)

வாதம் 8

உங்களுடைய மொழிபெயர்ப்பில் சொத்துப்பிரிப்பது சம்மந்தாமாக சில நபர்களுக்கு சொத்து பிரிக்கும்போது பாதிப்பு ஏற்படும் என்கிறீர்களே? அப்போது அந்த சில நபர்களுக்கு குர்ஆன் கூறும் சொத்துப்பிரிப்பு என்பது அவர்களுக்கு நாமமா?

(கண்ணாடி போட்டும் கண் தெரியலையா?)

மறுப்பு:

மொழிபெயர்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்று எழுதவில்லை. பாதிப்பு ஏற்படுவதாக சிலருக்கு தோன்றும் என்றுதான் போடப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் பாகப்பிரிவினை சம்மந்தமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிட வேண்டும் என்கிறான்.

அந்த அடிப்படையில் நாம் வழக்கமாக சொத்தை எப்படி பங்கிடுவோமோ அதே போல் பங்கிட்டால் சிலருக்கு சரியாக பங்கிட முடியாது. அதை அறிந்த அல்லாஹ் பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிடுங்கள் என்கிறான். அப்படிப்பட்ட சில இடங்களில் அல்லாஹ் சொல்வதை போல் பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிடுவது இலகுவானது. பாதிப்பு இல்லாத வகையில் பங்கிடும் முறை பற்றி மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல் அறிய குர்ஆன் விளக்கங்களில் 111
வது விளக்கத்தை காணவும்.குர்ஆன் யாருக்கும் எந்த நாமமும் போடச் சொல்லவில்லை.தெளிவாக உள்ளது.

வாதம் 9

2:29 வசனத்தில் பூமியை முதலில் படைத்தான் என்று குர்ஆன் சொல்கிறது. 79:30 வசனத்தில் பின்னர் பூமியை படைத்தான் என்கிறது
இந்த அடிப்படையில் குர்ஆன் முரண்படுகிறது?

(ஏதோ மாட்டிகிட்டோம்னு வாய்க்கு வந்ததெல்லாம் சொல்றீன்களே)

மறுப்பு

இதில் எந்த முரண்பாடும் இல்லை. 79:30 வது வசனத்தை தெளிவாக பார்க்கவும். பின்னர் பூமியை விரித்தான் என்றுதான் இருக்கிறது. பின்னர் பூமியை படைத்தான் என்று இல்லை.
இதன் பின்னர் பூமியை விரித்தான். 79:30

வாதம் 10

மூஸா நபி காலத்தில் இன்ஜீல் இருப்பதாக 7:157 வசனத்தில் குர்ஆன் சொல்கிறது. மூஸா நபி காலத்தில் பைபிள் எங்கே?
(பைபிள காணோம்னு போலிஸ்ல போய் புகார் கொடுங்கப்பா?)

மறுப்பு

அந்த வசனத்தில் எழுதப்படிக்கத் தெரியாத(உம்மி) நபி என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிதான் அந்த வசனம் சொல்கிறதே தவிர மூஸா நபி பற்றி இல்லை.

வாதம் 11

குர்ஆனில் கெட்ட மனிதர்களை புயல் காற்றை கொண்டு அழிக்கும் சம்பவத்தை கூறும்போது 54:19 வசனத்தில் 1 நாள் என்கிறது. 41:16 வசனத்தில் பல நாள் என்கிறது. 69:7 வசனத்தில் 7 நாள் என்கிறது.
அந்த சமுதாயத்தை அழித்தது 1 நாளா? பல நாளா? 7 நாளா?

(இலகுவான பதில் ஒன்றுமில்லாத வாதம்.)

மறுப்பு

54:19 வசனத்தில் தெளிவாக ஒரு நாளில் அனுப்பினோம். என்று தான் இருக்கிறது. ஒரு நாளில் அழித்து முடித்தோம் என்று சொல்லவில்லை.

19. தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் புயல் காற்றை நாம் அனுப்பினோம். 54:19

காற்று ஒரு நாளில் அனுப்பப்பட்டு அதன் தொடர்ச்சி பல நாள் நீடித்து இருந்தது என்று தெளிவாக உள்ளது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. உதாரணமாக நான் டெல்லிக்கு ஒரு நாள் ரயிலில் போனேன் என்றால் புறப்பாடு ஒரு நாளில் இருந்தது. அதன் பயணத் தொடர்ச்சி பல நாட்கள் இருந்தது. என்பதுதான்.

வாதம் 12

குர்ஆனில் 4:23 வசனத்தில் பெற்ற தாயை அம்மா என்கிறது குர்ஆன், அதே போல் அதே வசனத்தில் பாலுட்டிய தாயை மணக்கக்கூடாது அவர்களும் தாய் என்கிறது. அதே போல் நபிகள்(ஸல்) அவர்களின் மனைவியையும் மணக்கக்கூடாது அவர்கள் முஸ்லிம்களுக்கு தாய் என்கிறது. அப்போது உங்களுக்கு 1 தாயா? 2 தாயா? பல தாயா?
( நீங்கள் கூட சகோதர,சகோதரிகளே என்கிறீர்கள் உங்களுடைய சொத்தை அனைவர்க்கும் பங்கு வைத்தா கொடுப்பீர்கள்.)

மறுப்பு:

இது அனைவருக்கும் இலகுவாக புரியும் ஒன்றுதான் பாலூட்டியவர் தாய் என்றால் அவர்கள் தாயைப் போல் பாலூட்டினார்கள் அவ்வளவுதான் அவர்களுக்கு சொத்தில் பங்கு இல்லை. அதே போல் நபி(ஸல்) அவர்களின் மனைவியை மணக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் தாய் அந்தஸ்தில் உள்ளார்கள் என்பதுதான்.

இதுவெல்லாம் ஒரு கேள்வியா? உதாரணமாக மேடையில் ஏறி தாய்மார்களே! என்கிறோம். எல்லோரும் தாயா? இல்லை தாயின் அந்தஸ்தில் கூப்பிடுகிறோம். அவ்வளவுதான். அதேபோல் அம்மாவின் சகோதரருக்கும் மாமா என்கிறோம். வேறு சில வேலை செய்பவர்களையும் மாமா என்கிறோம்.
எல்லோரும் அம்மாவின் சகோதரரா?

வாதம் 13

நபிகள் நாயகம் கல்வி பின் வரும் காலத்தில் அழிந்துவிடும் என்கிறார்கள். அப்படி இருக்கையில் குர்ஆன் எப்படி பாதுகாக்கப்படும் என்கிறீர்கள்?(அரைகுறையாபார்த்துட்டு வந்துட்டு எவ்வளவு பில்டப்பு)

மறுப்பு:

கல்வி அழிந்து விடும் என்றால் அது என்ன கருத்து என்று பைஹகியில் தெளிவாக உள்ளது. நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள் குர்ஆனை சிலர் செயல்படுத்த மாட்டார்கள் என்பது அதன் பொருள். இதில் குர்ஆனின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. குர்ஆன் இருக்கும். ஆனால் மனிதர்கள் செயல் படுத்த மாட்டார்கள் என்பது அதன் விளக்கமாகும்.

வாதம் 14

தேனீக்கள் பூக்களில் தான் சாப்பிடுகிறது. கனிகளில் சாப்பிடுவதாகவும் குர்ஆன் 16:69 ல் சொல்கிறதே ஆதாரம் காட்ட முடியுமா? (பதில் சொன்னதும் வாயத்தொரன்தீன்ங்களா?

மறுப்பு:

தேனீக்கள் கனிகளும்,சாப்பிடுகிறது என்பதை விளக்கப்படத்துடன் காண்பிக்கப்பட்டது. வீடியோவும் உள்ளது.

வாதம் 15

இஸ்லாம் தற்காலிகத் திருமணம் அதாவது விபச்சாரத்தை அனுமதிக்கிறது. இதனால் குர்ஆன் இறைவேதம் இல்லை.
(நல்ல முயற்சி ஆனாலும் சிம்பிள் பதில்)

மறுப்பு:

இஸ்லாம் என்பது ஒரே அடியாக சட்டங்களை தொகுத்து புத்தகமாக அருளப்படவில்லை. அந்த அரபு மக்களிடத்தில் இருந்த சில பழக்கங்கள் தவறு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் தடுத்து முழுமையாக இந்த இஸ்லாத்தின் சட்டத்தை இறைவன் சொன்னான்.

அந்த அடிப்படையில் மதுவும், சிறிது சிறிதாகத்தான் தடுக்கப்பட்டது.
அதேபோல்தான் முத்ஆ எனும் வாடகைத்திருமணம் அந்த அரபுகளிடத்தில் இருந்தது இதை இறைவன் தடுத்து விட்டான். என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள்.

வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அலி (ரலி),
நூல் : புகாரி 4216, 5115, 5523, 6691

வாதம் 16

குர்ஆனில் எழுத்தில் தவறு இருக்கிறது என்று நீங்களே? கூறுகிறீர்கள் அப்போது எப்படி குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதமாகும்?
(இத வச்சுத்தான டைம ஓட்டநீங்க?)

மறுப்பு:

குர்ஆன் என்பது புத்தக வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஓசை வடிவில்தான் அருளப்பட்டது. குர்ஆன் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதை இறைவனே தெளிவாகக் கூறுகிறான்.
49. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். 29:49

இந்த வசனத்தில் தெளிவாக குர்ஆன் என்பது கல்வி கொடுக்கப்பட்ட வர்களின் உள்ளத்தில் பாதுகாக்கப்படுகிறது என்பதை கூறுகிறது. எழுத்தில் இல்லை.எங்களுக்கு மூலப்பிரதி என்பது குர்ஆனை மனனம் செய்த ஹாபிள்கள் தான். சிலர் தவறாக ஓதினால் பாதுகாக்கப்பட வில்லை என்பது கிடையாது.

அவர் தவறாக மனப்பாடம் செய்திருக்கிறார்கள். லட்சம் பேர் மனப்பாடம் செய்து இருவர் தவறாக ஓதினால் அவர் தவறாக மனப்பாடம் செய்தார் என்பதுதான் சரியானது. யாராவது குர்ஆன் என்று ஒன்றை ஓதினால் அது குர்ஆனில் உள்ளதா? இல்லையா? என்பதை குர்ஆனை மனனம் செய்தவர்களும் குர்ஆனை பற்றி அறிந்தவர்களும் சொல்லிவிடுவார்கள்.

எனவே எழுத்தில் பிழை என்பது குர்ஆனின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. குர்ஆன் என்பது ஓசை வடிவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...

01 May 2012

ஹெம்மாதகம விவாதத்தில் அசத்தியவாதிகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டது


இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மட்டுமே மனித வாழ்க்ககைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்பொதிந்துள்ளது. மனிதன் மறுமை நாள் வரை எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அவை இரண்டும் தன்னகத்தேகொண்டுளளன. அவற்றிலிருந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்பதை 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த விவாதத்தில் மீண்டும் ஒரு முறை தவ்ஹீத் ஜமாஅத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது.


இந்த விவாதம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
பயானில், பொது மேடைகளில், துண்டுப் பிரசுரங்களில் சொல்ல முடியாமல் போகின்ற விடயங்களை, எதிரணியை முன்னே வைத்துக் கொண்டு, நேருக்கு நேராக அவர்கள் தமது அறியாமையால் ஆபாசங்கள், அசிங்கங்கள் அடங்கிய தூய்மையான இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, மனித அறிவு ஏற்க மறுக்கும் அரக்கத்தனமான விடயங்களை இஜ்மா – கியாஸ் என்று சொல்லி மக்களை மடமையின் பக்கம் நகர்த்திச் செல்லும் விடயங்களை பகிரங்கமாகப் போட்டு உடைக்கக் கூடிய ஒரே களமே விவாதம்.
அவர்கள் அல்குர்ஆன் – அஸ்ஸூன்னா ஆகிய வஹியை விடுத்து நம்பிக்கை வைத்துள்ள, அற்ப மனித சிந்தைகள் உருவகித்த சலனங்கள், சத்திய இஸ்லாமாக இருக்க முடியாது;  அவை அநிஸ்லாமிய அரக்கத்தனங்கள் என்று நெஞ்சு நிமிர்த்தி அவர்களிடமே சொல்லி, அவர்களின் சிந்தையில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாதக் களங்கள் வரலாற்றுப் பதிவாக தடையங்களை அதன் தஃவா வரலாற்றில் வரைந்து காட்டியுள்ளது.
அந்தவகையில், இந்த விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத்,  தப்லீக் சார்பு எதிரணியால் இஸ்லாமாக ஏற்கபடும் அநிஸ்லாமிய அசத்தியங்களை அடுக்கடுக்காகப் பட்டியல் போட்டது. அவற்றிற்கு அவர்களின் உலமாக்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினாலும் பார்வையாளர்கள் மிக உன்னிப்பாகவும் அமைதியாகவும் அவதானித்தார்கள். இவை எல்லாம் மார்க்கமா? இவற்றை இஜ்மா – கியாஸ்  என்று  நம்பலாமா? என்று அவர்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதையே அவர்களின் அமைதி உலகுக்கு உணர்த்துகிறது.
சலசலப்பில்லாமல் அமைதியாக எதிர்வாதங்களைக் கேட்கக் கூடிய ஒரு முதிர்ச்சி நிலை மக்களின் மனதுகளில் ஏற்பட்டுள்ள ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இலங்கை தஃவாக் களத்தில் மலர்ந்துள்ளது என்பதை இந்த விவாதம் உணர்த்துகிறது.
இலங்கையில் ஹெம்மாதகமவில் நடந்த இந்த விவாதம் www.onlinepj.com ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் தமிழ்க்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விவாதத்தைப் பார்த்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 30க்கும் மேற்பட்ட கிளைகளில் இருந்து 200 பேரும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக 200 பேரும் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
அல்குர்ஆனையும் சுன்னாவையும் மட்டும் மூலாதாரமாகக் கொண்டுள்ள சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் எதிர்க்கருத்துள்ளோருடன் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும்.
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்ளூ அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். (அல்குர்ஆன் : 16:125)
இறைவன் தன்னுடைய திருமறையில் விவாதத்திற்கான அங்கீகாரத்தை இந்த வசனத்தில் வழங்கியுள்ளான். மேற்கண்ட வசனம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு விவாதக் களம் காண்பதும் ஒரு வழிமுறை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வினால் அகிலத்திற்கு அனுப்பட்ட பல நபிமார்கள் விவாத முறையில் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்து, அசத்திய வாதிகளை வாயடைக்கச் செய்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக ஏகத்தவ ஏந்தல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அல்குர்ஆன் கூறுவதைக் காணலாம். சிலைகளை வழிபடக்கூடிய மக்களிடம் அவர்களுடைய பிரசாரம் முழுவதுமே விவாதப் போங்கில் தான் அமைந்திருந்தது.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ‘என் இறைவன் உயிர் கொடுப்பவன்ளூ மரணிக்கச் செய்பவன்’ என்று இப்ராஹீம் கூறிய போது, ‘நானும் உயிர் கொடுப்பேன்ளூ மரணிக்கச் செய்வேன்’ என்று அவன் கூறினான். ‘அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே, நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!’ என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் (அல்குர்ஆன : 02:258)
இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். ‘என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?’ என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் :19:41,42)
மேற்கண்ட வசனங்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் நாட்டை ஆளும் அரசனிடமும், தம் தந்தையிடமும், இன்னும் சமுதாய மக்களிடமும் விவாதத்தின் மூலம், விவாதப் போங்கில் சத்தியத்தை எடுத்துரைத்ததைப் பறைசாற்றுகின்றன. இதேபோல் பல நபிமார்கள் ஆணித்தரமாக வாதிட்டுள்ளனர் என்பதை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
இதே அடிப்படையில் ஸ்ரீலங்கா  தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் தப்லீக் சார்பு இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகமயில் நடைபெற்ற விவாதம் அமைந்திருந்தது.
தகர்ந்தது தப்லீக் சார்புக் கோட்டை
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் அல்லாஹ்விடமிருந்த வந்த வஹியாகும். இவ்வஹி அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே ஆகும். இதைப் பின்பற்றுவது மட்டுமே நேர்வழியாகும்.
இவை இரண்டையும் விடுத்து இஜ்மா, கியாஸ், நபித்தோழர்களின் சொல், செயல் அங்கீகாரத்தை இஸ்லாத்தின் மேலதிக மூலாதாரமாக ஏற்றுப் பின்பற்றுவது வழிகேடாகும். மேலும்,  இவர்கள் ஏற்றிப் போற்றும் மத்ஹபுகளிலும், தப்ஸீர்களிலும், பிக்ஹ் – சட்ட நூல்களிலும் இஸ்லாத்திற்கு எதிரான அவற்றுடன் நேரடியாக மோதும் சட்டங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் அரக்கத்தனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, அவை பின்பற்றத் தகுதியற்றவை என்ற வகையில் தவ்ஹீத் ஜமாஅத் தமது வாதத்தை துவக்கிவைத்து, தப்லீக் ஜமாஅத் சார்பு இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் இஜ்மாவாக ஏற்றுள்ள மத்ஹபுகளில் காணப்படும் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும். ஆணின் ஹஜ்ஜை முறிக்காது என்ற பின்வரும் இஜ்மாவை எடுத்துப் போட்டது.
ஹஜ்ஜில் கழுதையுடன் காமவிளையாட்டு!
وكذالواستدخلتذكرحمارأوذكرامقطوعافسدحجهاإجماعا  (الدر المختار) [2 /615]
( قوله وكذا لو استدخلت ذكرحمار ) والفرق بينه وبين ما إذا وطئ بهيمة حيث لا يفسد حجه أن داعي الشهوة في النساء أتم فلم تكن في جانبهن قاصرة ، بخلاف الرجل إذا جامع بهيمة ط ( قوله أو ذكرا مقطوعا ) ولو لغير آدمي ط ( قوله ويمضي إلخ ) لأن التحلل من الإحرام لا يكون إلا بأداء الأفعال أو الإحصار ولا وجود لأحدهما ، وإنما وجب المضي فيه مع فساده لما أنه مشروع بأصله دون وصفه ، ولم يسقط الواجب به لنقصانه نهر (رد المحتار) [8 /444]
அத்தோடு,ஹஜ்ஜின் போது, சொந்த மனைவியோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாத்தில் சட்டமுள்ளது. ஆனால், உங்கள் இஜ்மாவில், ஆண் ஒருவர் மிருகத்துடன் புணரலாம், ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்மணி கழுதையின் ஆணுறுப்பை பெண்ணுறுப்புக்குள் நுழைக்கலாம், கால் நடைகளின் பின் துவாரத்தில் ஒருவர் புணர்ந்தால் ஹஜ் முறியாது என்றெல்லாம் ஆரக்கத்தனமாக உளறி வைக்கப்பட்டுள்ளதே என்று அடுக்கடுக்காக அவர்களின் ஆபாசப் புளுகுகளை அள்ளிப் போட ஆரம்பித்தது.
இதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்த அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் இஜ்மாவையும் கியாஸையும் விட்டதனால் இஸ்லாத்தை குறையாக மக்களுக்கு  முன்வைக்கிறது.இஸ்லாம் பூரணப்படுத்தப்படவில்லை.எங்கள் இஜ்மாதான் பூரணப்படுத்தியுள்ளது என்ற தோரணையில், தங்கள் ஆபாசம் நிறைந்த இஜ்மாவைக் காப்பாற்றுவதற்காக அல்லாஹ்வினால் நபியின் காலத்திலேயே பூரணமாக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையற்றது என்று உளர ஆரம்பித்தனர்.
அத்தோடு, சமூகத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஒன்றுகூடுவதற்குப் பெயர் தான் இஜ்மா. நவீன பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இஜ்மா என்று பொருந்தா இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்துத் துவண்டு போயினர்.
நீங்கள் காண்பித்த பிக்ஹ் நூற்களில் உள்ளதைப் பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அது எங்களின் தலைப்பு இல்லை என்று நமது கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்க முயற்சித்தனர்.
ரத்துல் முக்தாரில் உள்ள இவர்களின் ஆபாச இஜ்மாவிற்குப் பதில் சொல்லாமல் அது ஹனபி மத்ஹபின் நூல் என்று எங்களுக்கு தெரியாது. இஜ்மாவை மறுத்தால் குர்ஆனை ஏற்க முடியாமல் போகும். SLTJ யின் குர்ஆனைக் காட்டட்டும் என்றும், கஃபா மக்காவில் உள்ளது தான் என்று வஹி மூலம் நிருபிக்க முடியுமா? வஹி மூலம் சபா, மர்வா மலையை எப்படி உங்களால் நிரூபிக்க முடியும்? என்று எம்மிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
அல்லாஹ், அல்குர்ஆனில் இஜ்மாவை வலியுறுத்துகின்றான். இதோ வசனங்கள் என்று  சில வசனங்களை தொடர்ந்து ஓத ஆரம்பித்தனர். மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட இவர்களின் பரிதாப நிலையை நீங்களே பாருங்கள்.
பின்வரும் வசங்களை இஜ்மாவுக்கு ஆதாரம் என்று காண்பித்தனர். அவர்கள் சொன்ன இஜ்மா, கீழுள்ள ஏதாவது ஒரு வசனத்திலாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ(3:103)
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ(3:110)
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا (4:115)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا (4:59)
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ (9:100)
وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ( 31:15)
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ (2:143)
وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ( 9:122)
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ (43) بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ  (16:43)
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ(9: 71)
இந்த வசனங்களுக்கும் இஜ்மாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவர்களால் எடுத்துவைக்கப்பட்ட இந்தக் குர்ஆன் வசனங்களுக்கும் இஜ்மாவிற்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை. மொட்டத் தலையன் குட்டையில் விழுந்தான்  என்ற போக்கிலேயே இவர்களின் வாதம் இறுதித் தருணம் வரை அமைந்திருந்தது.
ஆபாசத்தை இஜ்மா என்று இவர்கள் கூறிய போது, இஜ்மாவின் விளக்கம் குறித்து நாம் மேலும் சில கேள்விகளை எழுப்பினோம்.
v          உங்கள் இஜ்மாவிற்காக முஹம்மது நபி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றுபடவேண்டுமா?கியாமத் நாள் வரை வரும் மக்களும் அடங்குவார்களா? இறந்துபோன நபர்களும் அடங்குவார்களா? உயிருள்ள ஒவ்வொருவரும் அடங்குவார்களா?
v          நபித்தோழர்கள் மட்டும் ஒன்றுபட்டால் இஜ்மாவாகுமா? மற்றவர்கள் ஒன்றுபட்டால் இஜ்மா ஆகாதா? ஒருவர் கூட கருத்து வேறுபாடு கொள்ளக்கூடாதா? அல்லது சிலர் கருத்துவேறுபாடு கொண்டாலும் அதிகமானோரின் கருத்து இஜ்மாவா?
v          அறிஞர்கள் மட்டும் ஒன்றுபட்டால் இஜ்மாவா? ஒருவர் கூட கருத்துவேறுபாடு கொள்ளக்கூடாதா? அல்லது சிலர் கருத்துவேறுபாடு கொண்டாலும் அதிகமானோரின் கருத்து இஜ்மாவா?
v          பலர் ஒன்றுபடுவதென்பது ஒரு சபையிலா? ஒரு தெருவிலா? ஊரிலா? ஒரு நாட்டிலா? உலகத்திலா?
v          இஜ்மாவை யார் தலைமையில் முடிவு செய்ய வேண்டும்?
v          நபியின் காலத்தில் இஜ்மா இருந்ததா? அல்லது நபிக்கு பிறகு தான் இஜ்மா வருமா?
v          ஒரு காலத்தில் இஜ்மா இல்லாமல் பிற்காலத்தில் இஜ்மா வருமா?
v          முற்காலத்தில் இருந்த இஜ்மாவை பிற்காலத்தில் உள்ளவர்கள் மாற்றுவார்களா?
v          அனைத்து மத்ஹபுகளும் இணைந்தால் இஜ்மாவா? அல்லது ஒரு மத்ஹபில் உள்ளவர்கள் இணைந்துவிட்டால் இஜ்மாவா?
v          மார்க்கத்தில் எந்த விசயத்திலும் இஜ்மா வருமா? அல்லது கடமையான ஹலால் மற்றும் ஹராம் சம்பந்தப்பட்ட விசயத்தில் மட்டும் இஜ்மா வருமா?
v          அகீதாவில் இஜ்மா உண்டா? ஃபர்ள்களில் இஜ்மா உண்டா? முபாஹான விசயங்களில் இஜ்மா உண்டா? சின்ன சட்ட விசயங்களில் இஜ்மா உண்டா?
v          சில அறிஞர்கள் இஜ்மா என்று சொல்லி சில அறிஞர்கள் இஜ்மா இல்லை என்று சொன்னால் அதன் நிலை என்ன?
v          நபி ஹலால் என்று சொன்னதை இஜ்மா ஹராமாக்குமா?
v          நபி ஹராம் என்று சொன்னதை இஜ்மா ஹலாலாக்குமா?
v          நபி கடமை என்று சொன்னதை இஜ்மா கடமையில்லை என்று சொல்லுமா?
v          நபி கடமை இல்லை சொன்னதை இஜ்மா கடமையாக்குமா?
v          இஜ்மாவை மறுத்தவர்களின் நிலை என்ன?
v          இஜ்மா மார்க்க விசயத்தில் மட்டுமா? உலக விசயத்திலுமா?
v          இஜ்மாவை ஏன் செய்ய வேண்டும்? இஜ்மாவுக்குரிய காரணங்கள் இப்போது இருக்கின்றதா? இல்லையா? இஜ்மா முற்றுப்பெற்றுவிட்டதா? இனி வரக்கூடியவர்கள் இஜ்மா செய்யலாமா?
v          இஜ்மாவை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் அனைவருக்கும் ஒவ்வொன்றா? ஆல்லது வேறுவேiறா?
v          இஜ்மா செய்து எடுத்த முடிவுகளின் பட்டியல் என்ன? அதைக் கொஞ்சம் தாருங்களே என்று நாம் அவர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விக் கணைகளை  இடையிடையே தொடுத்தோம். அத்திபாரமற்ற அவர்களின் ஆதாரங்களின் கோட்டை சரசரவென்று சரியத் தொடங்கியது.
முதல் நாள் விவாதத்தில் பதில் கூறுகிறோம் என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறியவர்கள் மறு நாளும் எந்த ஒன்றிற்கும் பதில் கூறவில்லை. ஒரு சில விஷயங்களுக்கு பதில் என்ற பெயரில் அனைவரும் சிரிக்கக்கூடிய வகையில் உளறித் தள்ளினார்கள்.
இவர்கள் தங்கள் மதுரசாக்களில் பிஞ்சு மாணவர்களின் நெஞ்சில் நஞ்சான இந்த ஆபாசக் காமக் களஞ்சியங்களைத் தான் மார்க்கம் என்று போதிக்கிறார்கள். எனவே,  இவர்களின் இஜ்மாவை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் மூலாதாரக் குப்பைகளை அடுக்கடுக்காக அள்ளிப்போட ஆரம்பித்தோம்.
  அவர்களின் மடமையைத் தோலுரித்துக் காட்டும் முகமாக தொடர்ந்து மத்ஹபுகளில் உள்ள இன்னும் பல கேள்விகளைக் கேட்டோம்.
அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்து விட்டு தன்னுடைய மனைவி என்று கூறினால் தண்டனையில்லை என்று رد المحتار உள்ள பினவரும் ஆரக்கத்தனம்.
رد المحتار – (15 ஃ 85)
وَفِي التَّتَارْخَانِيَّة عَنْ شَرْحِ الطَّحَاوِيِّ : شَهِدَ عَلَيْهِ أَرْبَعَةٌ بِالزِّنَا وَأَثْبَتُوهُ ثُمَّ ادَّعَى شُبْهَةً فَقَالَ ظَنَنْت أَنَّهَا امْرَأَتِي لَا يَسْقُطُ الْحَدُّ ، وَلَوْ قَالَ هِيَ امْرَأَتِي أَوْ أَمَتِي لَا حَدَّ عَلَيْهِ وَلَا عَلَى الشُّهُودِ .ا هـ .
وَفِي الْبَحْرِ لَوْ ادَّعَى أَنَّهَا زَوْجَتُهُ فَلَا حَدَّ وَإِنْ كَانَتْ زَوْجَةً لِلْغَيْرِ وَلَا يُكَلَّفُ إقَامَةَ الْبَيِّنَةِ لِلشُّبْهَةِ كَمَا لَوْ ادَّعَى السَّارِقُ أَنَّ الْعَيْنَ مِلْكَهُ سَقَطَ الْحَدُّ بِمُجَرَّدِ دَعْوَاهُ ا هـ وَتَقَدَّمَتْ هَذِهِ مَتْنًا فِي الْبَابِ السَّابِقِ .
சிறுமியின் உறுப்பை சிதைத்தால் தண்டனை இல்லை என்று إعانة الطالبين உள்ள சட்டம்
( قال ) وَإِنْ زَنى بِصَبِيَّةٍ لاَ يُجَامَعُ مِثْلُهَا فَأَفْضَاهَا فَلاَ حَدَّ عَلَيْهِ ؛ لِأَنَّ وُجُوْبَ حَدِّ الزِّنَا يَعْتَمَدُ كَمَالَ الْفِعْلِ ، وَكَمَالُ الْفِعْلِ لاَ يَتَحَقَّقُ بِدُوْنِ كَمَالِ اْلـمَحَلِّ ، فَقَدْ تَبَيَّنَ أَنَّ اْلَمَحَلَّ لَمْ يَكُنْ مَحَلًّا لِهذا الْفِعْلِ حِيْنَ أَفْضَاهَا بِخِلاَفِ مَا إِذَا زَنى بِهَا وَلَمْ يُفْضِهَا ؛ لأنه تبين أنها كانت محلا لذلك الفعل حين احتملت الجماع ، ولأن الحد مشروع للزجر ، وإنما يشرع الزجر فيما يميل الطبع إليه ، وطبع العقلاء لا يميل إلى وطء الصغيرة التي لا تشتهى ولا تحتمل الجماع فلهذا لا حد عليه (المبسوط) ஜ11 ஃ72ஸ
إعانة الطالبين – (4 ஃ 143)
ஆலிம்கள் கன்ஞா அடிக்கலாம் பொதுமக்களுக்கு சொல்லக் கூடாது. ஆலிம்கள் மட்டும் குறைந்த அளவு கஞ்சா, அபின் சாப்பிடலாம் என்று فتح المعين بشرح قرة العين بمهمات الدين  வரக்கூடிய சட்டம்.
وخرج بالشراب ما حرم من الجامدات فلا حد فيها وإن حرمت وأسكرت بل التعزير ككثير البنج والحشيشة والأفيون ويكره أكل يسير منها من غير قصد المداومة ويباح لحاجة التداوي   (فتح المعين بشرح قرة العين بمهمات الدين – (4 ஃ 156)
(قوله: ويكره أكل يسير منها) أي من هذه الثلاثة، والمراد باليسير أن لا يؤثر في العقل، ولو تخديرا وفتورا، وبالكثير ما يؤثر فيه كذلك، فيجوز تعاطي القليل مع الكراهة، ولا يحرم، ولكن يجب كتمه على العوام لئلا يتعاطوا كثيره ويعتقدوا أنه قليل    (إعانة الطالبين) ஜ4 ஃ177ஸ
வருடம் முழுவதும் லைலதுல் கத்ர்?
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ஜالقدرஃ1ஸ
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ஜالبقرةஃ185ஸ
حاشية رد المحتار – (ج 2 ஃ ص 498)
قوله: (لكن قيده الخ) أي قيد صاحب المحيط الافتاء بقول الامام يكون الحالف فقيها: أي عالما باختلاف العلماء فيها، وإلا فلو كان عاميا فهي ليلة السابع والعشرين لان يسمونها ليلة القدر، فينصرف حلفه إلى ما تعارف عنده كما هو أحد الاقوال فيها، وله أدلة من الاحاديث، وأجاب عنها الامام بأن ذلك كان في ذلك العام.
تتمة: ما ذكره عن الامام هو قول له، وذكر في البحر عن الخانية أن المشهور عن الامام أنها تدور: أي في السنة كلها، قد تكون في رمضان وقد تكون في غيره اه.
قلت: ويؤيده ما ذكره سلطان العارفين سيدي محي الدين بن عربي في فتوحاته المكية بقوله: واختلف الناس في ليلة القدر: أعني في زمانها، فمنهم من قال: هي في السنة كلها تدور، وبه أول.
فإني رأيتها في شعبان، وفي شهر ربيع، وفي شهر رمضان، وأكثر ما رأيتها في شهر رمضان وفي العشر الآخر منه، ورأيتها مرة في العشر الوسط من رمضان في غير ليلة وتر وفي الوتر منها، فأنا على يقين من أنها تدور في السنة في وتر وشفع من الشهر اه.
وفيها للعلماء أقوال أخر بلغت ستة وأربعين.
இந்த செய்தி தப்லீக் தஃலீமில் அமல்களின் சிறப்பிலும் உள்ளது.
கன்னிப் பெண்ணை கண்டறியும் ஆபாசாப் பிசோதனை
 وطريق معرفة أنها بكر أن تبول على جدار فإن وصل إليه فبكر وإلا فلا أو يرسل في فرجها ما في بيضة فإن دخل فثيب وإلا فبكر أو يرسل في فرجها أصغر بيضة للدجاجة فإن دخلت من غير عنف فهي ثيب وإلا فبكر (البحر الرائق شرح كنز الدقائق) ஜ11 ஃ26ஸ
(ولو ادعى الوطئ وأنكرته، فإن قالت امرأة ثقة) والثنتان أحوط (هي بكر) بأن تبول على جدار يدخل في فرجها مح بيضة (خيرت) في مجلسها (وإن قالت هي ثيب) أو كانت ثيبا (صدق بحلفه) فإن نكل في الابتداء أجل، وفي الانتهاء خيرت (كما) يصدق (لو وجدت ثيبا وزعمت زوال عذرتها بسبب آخر غير وطئه كأصبعه مثلا) لانه ظاهر والاصل عدم أسباب أخر. (الدر المختار) ஜ3 ஃ550ஸ
கன்னியை கண்டறியும் மூன்று சோதனை முறைகள் தன் இவர்களின் இஜ்மாவாம். இவர்கள் மதிக்கும் அமானி ஹஸ்ரத் இவ்வாறு பத்வாவும் கொடுத்துள்ளார்.
1.             சுவரை நோக்கி மூத்திரம் அடிக்க வேண்டும்.
2.             முட்டையை உள்ளே விட வேண்டும்.
3.             இல்லாவிட்டால் சின்ன முட்டையை உள்ளே விட வேண்டும்.
4.             ஆதாரம் : (பஹ்ருர் ராயிக் 4ஃ321)
உண்ணத்தக்க பிராணியும், மற்றோர் உண்ணத்தக்க பிராணியும் உடலுறவு கொண்டு, அதன் மூலம் ஆண் குழந்தை பிறந்தால், அவன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தலாம், தொழுகை முடிந்த பின் அவனையே தூக்கிப் போட்டு அறுக்கலாம் என்று إعانة الطالبين ல் வரக்கூடிய நகைச்சுவைத் துணுக்கு.
فتح المعين – (1 ஃ 94)
 وقال أيضا لَوْ نَزَا كَلْبُ أَوْ خِنْزِيْر عَلى آدَمِيَّةٍ فَوَلَدَتْ آدَمِيًّا كَانَ الْوَلَدُ نَجَسًا وَمَعَ ذلِكَ هُوَ مُكَلَّفٌ بِالصَّلاَةِ وَغَيْرِهَا
وقوله كلب أو خنزير إلخ مثله العكس وهو ما إَذَا نَزَى آدَمِيُّ عَلَى كَلْبَةٍ أَوْ خِنْـزِيْرَةٍ قوله كان الولد نجسا قال البجيرمي والمعتمد عند م ر أَنَّهُ طَاهِرٌ فَيَدْخُلُ الْمَسْجِدَ وَيَمَسُّ النَّاسَ وَلَوْ رَطَبًا وَيَؤُمُّهُمْ وَلاَ تَحِلُّ مُنَاكَحَتُهُ رَجُلاً كَانَ أَوْ اِمْرَأَةً لِأَنَّ فِيْ أَحَدِ أَصْلَيْهِ مَا لاَ تَحِلُّ مُنَاكَحَتُهُ وَلَوْ لِمِثْلِهِ ويقتل بالحر لا عكسه ويتسرى ويزوج أمته لا عتيقته اه وفي حاشية الكردي وأفتى م ر بطهارته حيث كان على صورة الآدمي كما ذكره سم في حواشي المنهج فإن كان على صورة الكلب قال سم في حواشي التحفة ينبغي نجاسته وأن لا يكلف وإن تكلم وميز وبلغ مدة بلوغ الآدمي إذ هو بصورة الكلب والأصل عدم آدميته اه وما تقرر كله إِذَا نَزَا كَلْبٌ أَوْ خِنْزِيْرٌ عَلى آدَمِيّةٍ وَالْعَكْسُ فَإِنْ نَزَا مَأْكُوْلٌ عَلى مَأْكُوْلَةٍ فَوَلَدَتْ وَلَدًا عَلى صُوُرْةِ اْلآدَمِيِّ فَإِنَّهُ طَاهِرٌ مَأْكُوْلٌ فَلَوْ حَفِظَ الْقُرْآنَ وَعَمِلَ خَطِيْبًا وَصَلّى بِنَا عِيْدَ اْلأَضْحى جَازَ أَنْ يُّضَحِّىَ بِهِ بَعْدَ ذلِكَ وبه يلغز فيقال لنا خطيب صلى بنا العيد الأكبر وضحينا به (إعانة الطالبين ج: 1 ص: 94)
கிழக்கிற்கும் மேற்கிற்கும் கல்யாணம்
تبيين الحقائق – (3 ஃ 39)
كَتَزَوُّجِ الْمَغْرِبِيِّ الْمَشْرِقِيَّةَ وَبَيْنَهُمَا مَسِيرَةُ سَنَةٍ فَجَاءَتْ بِوَلَدٍ لِسِتَّةِ أَشْهُرٍ من يَوْمِ تَزَوُّجِهَا لِلْإِمْكَانِ الْعَقْلِيِّ இ وهو أَنْ يَصِلَ إلَيْهَا بِخُطْوَةٍ كَرَامَةً من اللَّهِ تَعَالَى بِخِلَافِ مَسْأَلَةِ الصَّبِيِّ فإنه لَا يُتَصَوَّرُ أَنْ يُخْلَقَ من مَائِهِ இ وَلَيْسَ له مَاءٌ فَافْتَرَقَا (تبيين الحقائق شرح كنز الدقائق)
சிறுமியுடனோ, செத்த பிணத்துடனோ, ஒரு நாள் குழந்தையுடனோ, விலங்குடனோ உறவு கொண்டால் வுழு முறியாது, நோன்பு முறியாது என்று வரக்கூடிய ஆபாசக் களஞ்சியங்கள்.
( قال ) : فإِنْ جَامَعَ بَهِيْمَةً ، أَوْ مَيِّتَةً فَلَيْسَ عَلَيْهِ الْكَفَّارَةُ أَنْزَلَ أَوْ لَمْ يُنْزِلْ عِنْدَنَا خلافا للشافعي رحمه الله تعالى فإن السبب عنده الجماع المعدم للصوم وقد وجد ولكنا نقول الجناية لا تتكامل إلا باقتضاء شهوة المحل ، وهذا المحل غير مشتهى عند العقلاء فإن حصل به قضاء الشهوة فذلك لغلبة الشبق ، أو لفرط السفه ، وهو كمن يتكلف لقضاء شهوته بيده لا تتم جنايته في إيجاب الكفارة فهذا مثله )المبسوط( ஜ4 ஃ64ஸ
ولَوْ جَامَعَ بَهِيْمَةً فَأَنْزَلَ فَسَدَ صَوْمُهُ وَعَلَيْهِ الْقَضَاءُ وَلاَ كَفَّارَةَ عَلَيْهِ لأنه وإن وجد الجماع صورة ومعنى وهو قضاء الشهوة لكن على سبيل القصور لسعة المحل ، وَلَوْ جَامَعَهَا وَلَـْم يُنْزِلْ لاَ يُفْسِدُ . (بدائع الصنائع في ترتيب الشرائع)  ஜ4 ஃ223ஸ
( قوله : فلا تجب الكفارة لو جامع بهيمة أو ميتة إلخ ) قال الرملي : اقتصاره على نفي الكفارة يوهم وجوب القضاء ولو لم ينزل مع أن الأمر ليس كذلك لَمَّا أَنَّ جِمَاعَ الْبَهِيْمَةَ وَالْمَيِتَةَ بِلاَ إِنْزَالٍ غَيْرَ مُفْسِدٍ لِلصَّوْمِ كَمَا فِي الْخُلاَصَةِ وَغَيْرِهَا وَقَدْ تَقَدَّمَ أَنَّهُ لاَ يُوْجِبُ الْغُسْلَ بَلْ ، وَلاَ نَقَضَ الْوُضُوْءَ مَا لَمْ يَخْرُجْ مِنْهُ شَيْءٌ صرح به في شرح المختار ولابن ملك وتوفيق العناية شرح الوقاية (البحر الرائق شرح كنز الدقائق) ஜ6 ஃ213ஸ
و لو جامع بهيمة فأنزل فسد صومه و عليه القضاء و لا كفارة عليه لأنه و إن وجد الجماع صورة و معنى و هو قضاء الشهوة لكن على سبيل القدور لسعة المحل و لو جامعها و لم ينزل لا يفسد (بدائع الصنائع )ஜ2 ஃ237ஸ
( ولو جامع ميتة أو بهيمة فلا كفارة أنزل أو لم ينزل ) خلافا للشافعي رحمه الله ؛ لأن الجناية تكاملها بقضاء الشهوة في محل مشتهى ولم يوجد ، ثم عندنا كما تجب الكفارة بالوقاع على الرجل تجب على المرأة .(العناية شرح الهداية) ஜ3 ஃ293ஸ
جماع البهيمة لا يفسد الصوم ان لم ينزل
(أو بهيمة أو فخذا أو بطنا أو قبل) ولو قبلة فاحشة بأن يدغدغ أو يمص شفتيها (أو لمس) ولو بحائل لا يمنع الحرارة أو استمنى بكفه أو بمباشرة فاحشة ولو بين المرأتين (فأنزل) قيد للكل حتى لو لم ينزل لم يفطر كما مر  (الدر المختار) ஜ2 ஃ445ஸ
( ولو وطئ ) امرأة ( ميتة أو بهيمة ) حية ( أو ) وطئ حيا ( في غير السبيلين ) كالفخذ والبطن والإبط ( أو قبل أو لمس ) أي مس البشرة بلا حائل ؛ لأنه لو مسها من وراء الثوب فأنزل فسد إذا وجد حرارة أعضائهم وإلا فلا كما في المحيط ( إن أنزل ) قيد للجميع ( أفطر ) ولزمه القضاء ؛ لأن في الإنزال يوجد فيها معنى الجماع ولا كفارة لنقصان الجناية لعدم المحل المشتهى في الميتة والبهيمة ولعدم صورة الجماع في الباقي . ( وإلا ) أي وإن لم ينزل ( فلا ) يفطر لعدم موجب الإفطار ، ولو قبل بهيمة أو نظر فرجها فأنزل لا يفسد .(مجمع الأنهر في شرح ملتقى الأبحر) ஜ2 ஃ339ஸ
وَعَلَى هَذَا الْخِلَافِ إذَا أَتَى بَهِيمَةً فَأَنْزَلَ وَإِنْ لَمْ يُنْزِلْ لَا يَفْسُدُ صَوْمُهُ بِالِاتِّفَاقِ وَلَا يُنْتَقَضُ وُضُوءُهُ (تبيين الحقائق شرح كنز الدقائق )ஜ4 ஃ85ஸ
رد المحتار – (7 ஃ 403)
( أَوْ جَامَعَ فِيمَا دُونَ الْفَرْجِ وَلَمْ يُنْزِلْ ) يَعْنِي فِي غَيْرِ السَّبِيلَيْنِ كَسُرَّةٍ وَفَخِذٍ وَكَذَا الِاسْتِمْنَاءُ بِالْكَفِّ وَإِنْ كُرِهَ تَحْرِيمًا لِحَدِيثِ { نَاكِحُ الْيَدِ مَلْعُونٌ } وَلَوْ خَافَ الزِّنَى يُرْجَى أَنْ لَا وَبَالَ عَلَيْهِ
رد المحتار – (7 ஃ 403)
( أَوْ أَدْخَلَ أُصْبُعَهُ الْيَابِسَةَ فِيهِ ) أَيْ دُبُرِهِ أَوْ فَرْجِهَا وَلَوْ مُبْتَلَّةً فَسَدَ ، وَلَوْ أَدْخَلَتْ قُطْنَةً إنْ غَابَتْ فَسَدَ وَإِنْ بَقِيَ طَرَفُهَا فِي فَرْجِهَا الْخَارِجِ لَا
 தொழுகையில் பைபிள் ஓதலாம் என்று إعانة الطالبين ல் வரும் சட்டம்
رد المحتار – (4 ஃ 13)
ஜ فُرُوعٌ ஸ قَرَأَ بِالْفَارِسِيَّةِ أَوْ التَّوْرَاةِ أَوْ الْإِنْجِيلِ،إنْ قِصَّةً تُفْسِدُ ، وَإِنْ ذِكْرًا لَا ؛ وَأُلْحِقَ بِهِ فِي الْبَحْرِ الشَّاذِّ ، لَكِنْ فِي النَّهْرِ : الْأَوْجَهُ أَنَّهُ لَا يُفْسِدُ وَلَا يُجْزِئُ كَالتَّهَجِّي .
إعانة الطالبين – (4 ஃ 14)
              ஒரு பெண் தன் விரலை தனது உருப்பில் நுழைத்து ஈரம் இல்லை என்றால் நோன்பு முறியாது. ஈரமாக இருந்தால் நோன்பு முறியும்.
              ஒரு பெண் தனது உறுப்பில் பஞ்சை நுழைத்து, அது முழுமையாக அவளின் பெண்ணுறுப்பில் சென்றால் நோன்பு முறியாது. அதன் பாதி உள்ளேயும் மறு பாதி வெளியேயும் இருந்தால் நோன்பு முறியும்.
              ஒருவரின் உருப்பை மற்றவரின் கையில் பிடிக்கக் கொடுத்தால் வுழு முறியும்.
              பிளக்கப்பட்ட ஆணுறுப்பை முன்னாலும் பின்னாலும் செலுத்தினால் குளிப்புக் கடமையாகாது.
              கையினால் சுய இன்பம் செய்துகொண்டால் ஹஜ் முறியாது.
              மிருகத்துடன் ஒரு ஆண் உறவு கொண்டால் ஹஜ் முறியாது.
              கால் நடைகளின் பின் துவாரத்தில்; நுலைத்தால் ஹஜ் முறியாது.
              மாதவிடாய் இரத்தத்தை ஒரு பெண் தனது உறுப்பில் ஊற்றி அது முழுமையாக சென்றுவிட்டால்   குளிப்புகடமை இல்லை. பாதி வெளியே இருந்தால் குளிப்புகடமையாகும்
              ஓர் ஆண் தனது விந்தை தன் முன் துவாரத்தில், அல்லது பின் துவாரத்தில் ஊற்றி முழுமையாக உள்ளே சென்றால் குளிப்புக் கடமையில்லை. வெளியே பாதி இருந்தால் குளிப்புக் கடமையாகும்.
              நிர்வாணமாக மணப் பெண்ணைப் பார்த்து தன் உறுப்பை பிடித்துக் காட்டி இது போதுமா? போதாதா? என்று ஷஃரானி கூறுகிறார்.
இத்தனை ஆபாசங்களில் எதுவும் எங்களுக்கு அசிங்கமில்லை என்று நாக் கூசாமல் சொன்னார்கள். இன்னும் இது போன்ற இன்னோரன்ன இவர்களின் இஜ்மாக்களை  மத்ஹப் குப்பைகளிலிருந்தும் இவர்களின் அங்கீகாரம் பெற்ற  தரங்கெட்ட தப்ஸீர்களில் இருந்தும் எடுத்துக் கூறி இவையெல்லாம் மார்க்கத்திற்கு மாற்றமானவை. எனவே, மத்ஹப் குப்பைகளைப் பின்பற்றக் கூடாது என தெளிவாக எடுத்துரைத்தோம்.
இதில் எந்த ஒன்றிற்கும் அவர்கள் பதில் கூறவில்லை. மழுப்புவதற்காக பதில் என்று சிலதைச் சொன்னார்கள்.
              வத்தபிஃ சபீல மன் அனாப் وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ  எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
              வஸ்ஸாபிகூனல் அவ்வலூன் எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
              வஃதஸிமு பிஹப்லில்லாஹ் எனும் வசனம் இஜ்மாவிற்கு ஆதாரமாகும்.
              ஒருமித்த கருத்து வருவதற்க்கு  (துபக்கிஹூ பித்தீன்) வசனம் போட்டோம். அதற்கு பதில் இல்லை என்றனர்.அதற்கு வளக்கம் அளித்த போது, தலைமை பீடத்தில் எத்தனை போர் வெளியேற்றப் பட்டார்கள் என்று குற்றம் செய்தவர்களை நீக்கியதைக் குறை கூறினார்கள். இவர்களின் மதுரசாக்களில் நடந்த காம லீலைகளையும் காமக் களஞ்சியமாகச் செயற்பட்ட மதுரசாக்கள் மூடப்பட்டதையும் பற்றி பட்டியல் தரவா? என்றவுடன் அதைப் பற்றி இறுதிவரை வாயே திறக்கவில்லை.
              இவர்களிடம் இஜ்மா கியாஸ் இல்லாததினால் எத்தனை பிரிவினைகள் என்று அவர்களின் மதஹப் போன்ற பிரிவினைகள் தவ்ஹீதில் இருப்பது போன்ற தோரணையை ஏற்படுத்த முயற்சித்தனர்.
              பராயிலுக்கு நாங்களும் குர்ஆன், ஹதீஸில் இருந்தும் இஜ்மாவின் துணையுடன்  சொல்லப் போகின்றோம் என்று சவடால்; விட்டவர்கள் மஸாயிலே மின்பரிய்யிவின் படி அலி (ரலி) அவர்கள் 1ஃ8 ஜ 1ஃ9 ஆக எடுத்துக் கொண்டால் கணக்கு சரியாகி விடுகிறது என்றார்கள். உடனே நாம் இஜ்மா என்பது ‘இத்திபாகு முஜ்தஹிதி ஹாதிஹில் உம்மா’ (இந்த உம்மத்தின் ஆய்வாளர்கள் ஒன்றுபடுவது) என்று கூறினீர்களே! வாரிசுரிமை விடயத்தில் 1ஃ8 தான் மனைவிக்கு வர வேண்டும் என்று அல்லாஹ் கூறிய பிறகு, இல்லை 1ஃ9 என்று அலி (ரலி) அவர்களின் மஸாயிலுல் மின்பரிய்யா கூறுகிறது என்று அல்லாஹ்வின் கூற்றுக்கு நேரடியான மாற்றம் செய்வது தான் இஜ்மாவின் இலட்சணமா? இஜ்மாவை காப்பாற்ற நினைத்து அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் நேரடியாக மோதுகிறதே! அலி (ரலி) அவர்களை தவிற வேறு எந்த அறிஞர் இதை கூறியுள்ளார். அலி (ரலி) அவர்கள் கூறினால் அது ஒட்டு மொத்த உம்மத்தின் ஆய்வாளர்களின் கருத்தாகிவிடுமா? என்றவுடன் இவர்கள் ஸஹாபாக்களைத் திட்டுபவர்கள் என்றனர். அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் நேரடியாக மோதுகிற கருத்தை புறக்கணிப்பது எந்தவகையில் ஸஹாபாக்களைத் திட்டுவதாக அமையும்? அவர்களின் வரைவிலக்கணத்திற்கு அவர்களே முரண்பட்டு அசடு வழிந்தது அவர்கள் அசத்தியவாதிகள் என்பதைப் பறைசாற்றியது.
              ஆண்டு முழுதும் லைலதுல் கத்ர் வரும். ஷஃபானில் லைலதுல் கத்ரை இப்னு அரபி அடைந்ததாக தஃலீமில் உள்ளதே என்ற போது, ஷஃபானில் லைலதுல் கத்ரை இப்னு அரபி அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன? இப்னு அரபியை இலங்கையில் உள்ளவர்கள் பின்பற்றுவதில்லை என்று தான் சொன்னார்களே தவிர அது தவறு என்று ஏற்க அவர்களின் சலனப் புத்தி சம்மதிக்கவில்லை.
              பெரும் பாலான முஃமீன்களுடைய மற்றும் அறிஞர்களுடைய ஏகோபித்த முடிவு தான் இஜ்மாவாகும் என்று மீண்டும் புதிய வரைவிலக்கணத்தை சொல்ல ஆரம்பித்தனர்.
              கிதாபுல்லா வஇத்ரதீ என்று ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது என்று இலக்கத்துடன் கூறி, ஷீஆ இயக்கத்தின் பின்னால் போகத் தயாரா? என்று முஸ்லிமில் இல்லாத ஹதீஸைக் கூறி ஷீஆவை எதிர்க்கும் எம்மை அவர்கள் பின்னால் போகத் தயாரா? என்று கேட்டனர். இத்ரதி எனும் வார்த்தை முஸ்லிமில் இல்லை எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டபோது திர்மிதியில் உள்ளது உள்ளது என்றனர்.
              அகீமுஸ் ஸலாஹ், ஆதுஸ் ஸகாத் என்பதில் அனைத்து அறிஞர்களும் முஃமின்களும் ஒன்று பட்டுள்ளனர். அதுதான் இஜ்மா என்று மீண்டும் உளர ஆரம்பித்தனர். முழு உம்மத்தும் ஒரே கருத்தில் ஒன்று பட்டால் அது இஜ்மாவாகும்.
              நாங்கள் மத்ஹபை பின்பற்றுகின்றோம். நாங்கள் (கண்மூடிப் பின்பற்றும்) முகல்லித்கள்தான். எங்களிடம் சொந்த ஆய்வு இல்லை என்று அவர்கள் கூறியபோது கூட்டமே கொள்லென்று சிரித்தது.
              இப்னு அரபி என்ற வழிகேடன் லைலத்துல் கத்ரை ஷஃபானில் பார்த்தாக தஃலீமில்  உள்ளதே என்று மீண்டும் கேட்ட போது, தஃலீம் பற்றி நம்மிடம் ஏன் பேசுகிறீர்கள்? அதில் சிலருக்கு ஈடுபாடு இல்லை. அதிலே எங்களுக்கு இஜ்மா இல்லை என்றனர்.
              பிக்ஹ் கிதாபுகளில் உள்ளதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. அவைகள் ஆபாசமும் இல்லை. அவற்றை வேறு தலைப்பில் பேசுவோம் என்றனர்.நாம் காட்டிய 10 வசனங்களிலும் ஒன்று படுவது என்று இல்லையா? என்று ஒற்றுமை பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் உள்ள விடயங்களை இஜ்மா பற்றி உள்ளது என்று தங்கள் அறிவை அம்பலத்தில் அரங்கேற்றினர்.
              வாரிசுரிமை சட்டத்தை இஜ்மா, கியாஸை விட்டுவிட்டு பிரித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்கள். உடனே நாம் பிரித்துக் காட்டினோம்.
              நாங்கள் நபிகள் நாயகத்தின் காலத்தில் இல்லாததை இஜ்மாவின் அடிப்படையில் குர்ஆனில் சேர்த்துள்ளோம் என்று ஏற்றுக் கொண்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆனை காட்டுங்கள்.
              தங்கத்திற்க்கு காசுக்கு வட்டி இல்லை என்று சொல்லப் போகிறீர்களா?
              நவீன பிரச்சினைக்கு தீர்வு நேரடியாக இல்லை. எனவே கியாஸ் தேவை.
              நாம் பிக்ஹ் கிதாப்களின் ஆபாசங்களை மத்ரஸாக்களில் படித்துக் கொடுப்பது உண்மை தான்.
              பிக்ஹ் கிதாப்களில் உள்ளவைகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்.
              நாங்கள் உங்களுக்கு குறிப்பு தருகிறோமா? சரி நீங்கள் குறிப்பு கொண்டு வரவில்லை அதனால் தான் தருகிறோம்.
              அம்வால் என்று வரக் கூடிய எல்லாம் வட்டியா? அப்படியென்றால் ஒரு காருக்கு இரண்டு கார் மாற்றினால் அது வட்டியா?
              ஷஃரானி எனும் அறிஞர் குர்ஆனில் புது வசனங்கள் சேர்துள்ளார் என்பது அவரது புத்தகங்களில் அவரது விரோதிகளால் சேர்க்கப்பட்டது என்பது அல்-மினனில் எழுதப்பட்டுள்ளது என்று ஒரு தொலை நகலைக் தந்தனர். வஹிக்கு முரணான சட்டங்களை அள்ளிப் போட்ட போது, பதில் சொல்லாத அவர்கள் ஷஃரானியைக் காப்பாற்ற தொலை நகலைக் கொண்டு வந்தனர்.தனிமனிதன் மீது இவர்களுக்கு இருக்கின்ற பற்றின் கடுகளவு கூட இஸ்லாத்தின் மீது இல்லை என்பது அப்பட்டமாக அம்பலமானது.
இவ்வாறு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் கூறி இந்தக் கப்சாக்களையும், ஆபாச அநியாயங்களையும் நியாயப்படுத்த முயன்றார்கள். இவர்கள் சொன்வை எதுவும் பதில் இல்லை என்று நாம் நிரூபித்த பின்பும் அவர்கள் ஆபாசம் எதற்கும் வாய் திறக்கவில்லை. கேள்வி பதில் நேரத்திலும் பதில் சொல்லவில்லை.
நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அசடு வழிந்ததையும், வியர்த்து விறுவிறுத்ததையும் அந்த விவாத சீடிகளைப் பார்க்கக் கூடிய யாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்தி(SMS)களை தற்போது அனுப்பி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய தோல்வி அம்மணத்தை மறைப்பதற்கு,  இப்படி ஓர் அவதூறு அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு தங்கள் ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர்.
இன்று  நடைமுறையிலுள்ள ஷாஃபி, ஹனஃபி மத்ஹபுகளின் சட்ட நூற்களிலும் தப்ஸீர்களிலும் தஃலீமிலும் குர்ஆன் – ஹதீஸிற்கு முரணானவையும் குர்ஆனின் ஆதாரமோ, ஹதீஸின் ஆதாரமோ இல்லாத ஏராளமான விஷயங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பின்பற்றக் கூடாது என்பதும், இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதும் இந்த விவாதத்தில் மீண்டும் நிரூபணமானது
குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். இந்த ஆபாசங்களைப் பின்பற்ற முடியாது என்று தெளிவாக விளக்கிக் கூறிய பிறகும் இவர்களால் மத்ஹப் குப்பைகளில் உள்ள ஆபாசங்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போனதால் தான் அதைப் பற்றி வாய் திறக்காமல் விவாதத்திற்குத் தொடர்பில்லாமல் பேச ஆரம்பித்தனர். இஜ்மாவிற்கு ஆதாரம் இல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான ஜகாத்,தொழுகை போன்ற சில நூல்களில் குர்ஆன் ஹதீஸில் மட்டும் உள்ள ஓருமித் கருத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளோம் என்பதைக் காட்டினர். இது எந்தவகையில் இவர்களின் இஜமாவிற்கு ஆதாரமாகும்?
              பன்றியின் இறைச்சி தொடர்பாக பீஜே அவர்களால் முன்னர் எழுதப்பட்ட விடயங்கள்.
              தர்ஜமாவில் வேதக்காரப் பெண்களை மணப்பது தொடர்பான விடயங்கள்.
              குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்கள்.
போன்ற சில வாதங்களை எடுத்து வைத்தார்கள். இவை அனைத்திற்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.
இந்த தலைப்பு தொடர்பான விவாதத்தில் அவர்கள் தங்களின் தலைப்பிற்கு உட்பட்டு எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்க வில்லை. தலைப்பைத் திசை திருப்புவதற்காக சம்பந்தமில்லாத வகையில் உங்கள் குர்ஆனைக் காட்டுங்கள் என்பது போன்ற விஷயங்களைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் தலைப்பிற்கு அப்பால் சென்றாலும் அவர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் நம் தரப்பில் தெளிவான பதில் எடுத்து வைக்கப்பட்டது.
விவாத உடன்படிக்கையில் ஆதாரம் குர்ஆன் – ஹதீஸ் என்று போடப்பட்டுள்ளது. எந்தக் குர்அனிலிருந்து ஆதாரம் காட்டுவீர்கள் என்று அப்போது நம்மிடம் கேட்டிருந்தால் அதையே தலைப்பாக்கி விவாதித்திருக்கலாம்.
அவர்கள் சார்பாக வந்தவர்களில் இருவர் மட்டுமே அதிகமா வாதிட்னர். அவர்களில் ஒருவர் இறுதிவரை வாய் திறக்கவே இல்லை. சிலர் சிற்சில வாதங்களை அவர்களின் அணிக்கு எதிராகவே வைத்து Same Side Goal போட்டனர்.
நாம் 3 பேரை அசிங்கத்தை அள்ளிப் போட பயன் படுத்துவதாக குற்றம் சாட்டினர். ஏன் உங்கள் அணியில் மற்றவர்கள் பேசமாட்டர்களா என்று கேட்டபோது, நாங்கள் இருவரும் Slow Boll போட்டோம். பாஸ்ட் போலரை இறக்கினால் உங்களுக்கு பதில் சொல்ல முடியால் போகும் என்றனர். அவர்கள் அணியால் போட்டவை அனைத்தும்  No Boll. அதனால் Free Hit வாய்ப்பில் நாம் அடித்ததெல்லாம் Sixes.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (21:18)
எனவே, இந்த விவாதம் சத்தியத்திற்கு மகத்தான வெற்றியயையும் அசத்தியத்திற்கு தோல்வியையும் ஏற்படுத்தியது.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)
உண்மையில் இது அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போன்று உள்ளது.
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன் 14:24)
ஆம்! குராபிகளின் கொள்கை மரங்கள், பூமியின் அடித்தளத்தில் வேர் பிடிக்காத காரணத்தால்; விரைவில் மடமடவென சாயப் போகிறது. அடித்தளத்தில், ஆணித் தரமான வேர் பிடிப்புடன் உள்ள சத்திய மரத்தின் கிளைகளைப் பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக. ஏகத்துவத்தின் இனிய கொள்கைக் கனிகளைச் சுவைக்க வரப்போகிறார்கள்.
விவாதத்தின் ஒளிப்பதிவு  ஒரு வார்த்தை கூட எடிட் செய்யாமல் குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளது. இணையதளங்களிலும் உலாவிக்கொண்டிருக்கிறது. இந்தப் பதிவுகளைப் பார்ப்பவர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியும், எது சத்தியக் கருத்து என்று!
இப்படித் தெளிவான ஆதாரங்கள் இருக்கையில் வெற்றி வெற்றி என்றும் குர்ஆனை நாம் மறுத்ததாகவும் அசத்தியக் கும்பல்கள் செய்யும் அபப்பிரசாரம் ஒரு போதும் எடுபடப் போவதில்லை. எள் முனை அளவும் எடை பெறப் போவதில்லை.
இந்தக் குப்பைகளை நியாயப்படுத்துவதற்காக இவர்கள் குர்ஆன் வரிகளைக் கூட பொய்யெனக் கருதுவதற்குத் துணிந்து விட்டார்கள். அல்லாஹ்வின் வேத வரிகளுக்கு நிகராக கேடு கெட்ட ஆபாச வரிகளைக் கருதுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் எங்கெல்லாமோ எதையெதையோவெல்லாம் தலைப்பிற்கு வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் சத்தியம் மேலோங்கியது என்பதை விவாத சிடிக்களின் தொகுப்பைக் காண்கின்ற யாரும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
விவாத அரங்கில் பதில் கூற முடியாமல் திணறியவர்கள் அரங்கிற்கு வெளியில் வந்தவுடன் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கப்சா விடுவதோடு மட்டுமல்லாமல், அரங்கத்தில் வைக்காத வாதங்களை எல்லாம் கூறி ‘நாங்கள் அதைக் கேட்டோம் பதில் கூறவில்லை’ ‘இப்படிக் கேட்டோம் பதில் கூறவில்லை’ என்று பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். விவாதக் களத்தில் அவர்கள் தட்டுத் தடுமாறியதை உலகமே லைவில் பார்த்தது.
இரண்டாம் நாள் இறுதி அமர்வு கேள்வி – பதில் அரங்கமாக அமைந்தது. இரண்டு பக்கமும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதித் தருணம் வரை விவாதம் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிவடைந்தது.
‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது’ என்றும் கூறுவீராக! (17:81)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி - SLTJ


மேலும் படிக்க...

28 April 2012

முஸ்லிம்களின் கவனத்திற்கு - சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!
இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்
1) தக்னி முஸ்லிம்

2) தூதுகோலா

3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்

4) மாப்பிள்ளா
என 4 சாதியினராக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 4 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.
பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.
எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 4 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீது இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும் போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்று தான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதிரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.
அரசியல் சட்டம் வகுக்கப்படும் போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழி வகை செய்யப்பட்டது. அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டைவிட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது. மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும் என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார்.
அதனால் இந்துக்களை சாதிரீதியாக பிரித்தது போல் முஸ்லிம்களையும் சாதிரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதைமாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்ல வேண்டும்.
அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்ல வேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைஉள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Thanks to www.tntj.net
மேலும் படிக்க...

16 April 2012

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளம்! இந்து சகோதரர்களும் கண்டனம்

சிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் "மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் அனைத்து கிளைலிருந்தும் சுமார் இரண்டு ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் ஆலயத்தை எழுப்ப ஆர்பரித்தனர். பாதுகாப்பிற்காக ஏரளமான போலீசார் குவிக்கபட்டுயிருந்தனர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தினதந்தி பத்திரிக்கையில் போட்டோவுடனும் மற்றும் ஆர்பாட்டம் பற்றிய செய்திகள் அணைத்து முக்கிய பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது , சில TV செய்திகளிலும் செய்தியாக வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
பிரச்சனை சுன்னத்ஜமாத் மதரசா பற்றியதாக இருந்தாலும் அது முஸ்லிம்களின் உரிமை அதை பறிக்க அரசாங்கத்திற்கு கூட உரிமை இல்லை என்ற அடிப்படையில் TNTJ நடத்திய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுன்னத் ஜமாத்தினர் அனைவரும் பாராட்டினர்.

 TNTJ தலைமையில் நடந்த இந்த வழிபாட்டு உரிமை மீட்பு ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் மற்றும் பல பள்ளிவாசல் இமாம்களும் , முத்தவல்லிகளும் பங்கேற்றனர் . ஆர்பாட்டதிற்கான சிறப்பான ஏற்பாடுகளை சிதம்பரம் TNTJ கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்டத்தின் அணைத்து கிளைகளிலிருந்தும் ஏராளமான வாகனங்களில் TNTJ வினர் வந்திருந்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் நிஷார் அஹம்மது அவர்கள் நன்றி கூறினார்.
  
கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி தலுக்கா - மானியம் ஆடூர் ஊராட்சி தலைவர் ”சிவானந்தம்” தன்னுடைய ஏராளமான ஆதரவாளர்களுடன் 14.04.2012 அன்று நடத்திய TNTJ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 

 அப்போது அவர் உணர்வு - விற்கு அளித்துள்ள பேட்டியில்: இந்து முஸ்லிம் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்த ஒற்றுமையை பிடிக்காத சங்பரிவார கூட்டம் ஏற்படுத்தும் குழப்பம்தான் இது. முஸ்லிம்களுக்கு சிதம்பரம்- லால்புரம் MRV நகரில் மதரஸா கட்ட அரசு அனுமதித்தே ஆகவேண்டும். இல்லையேல் இந்த அநியாயத்தை எதிர்த்து நாங்களும் ஆர்பாட்டம் செய்வோம் என கூறினார். எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே!!!

இன்ஷாஅல்லாஹ் விரைவில் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்ப அனைவரும் துஆ செய்யுங்கள்..........



மேலும் படிக்க...

08 April 2012

மானியம் ஆடூரில் தவ்ஹீத் மஸ்ஜித் திறப்பு- அல்தாபி சிறப்புரை

 
கடலூர மாவட்டம் மானியம் ஆடூரில் கட்டப்பட்டு வந்த தவ்ஹீத் மஸ்ஜித் வெள்ளிக் கிழமை (06.04.2012) அன்று பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களின் ஜூம்மா உரையுடன் ஆரம்பம் செய்யபட்டது .கொள்ளுமேடு லால்பேட்டை,ஆயங்குடி,காட்டு மன்னார்குடி,கந்தகுமரம் போன்ற ஊர்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நம் ஊரில் இருந்து ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இரண்டு வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்..............
மேலும் படிக்க...